என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐயப்பன் தரிசனம்
நீங்கள் தேடியது "ஐயப்பன் தரிசனம்"
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன் என்று புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய் கூறினார். #TruptiDesai #Sabarimala
திருவனந்தபுரம்:
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப்படியே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான், மராட்டிய மாநிலத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன்.
என்ன எதிர்ப்புகள் வந்தாலும் ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அவர்கள் எனக்கும், என்னுடன் வந்த பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்திதேசாய் பேட்டி பற்றி அறிந்த பக்தர்கள், திருப்திதேசாய் ஐயப்பனை தரிசிக்க வரவில்லை. ஐயப்ப பக்தர்களின் அமைதியை குலைக்க வந்துள்ளார். மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வந்துள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு திருப்தி தேசாயை அழைத்து செல்ல மாட்டோம் என்று விமான நிலைய டாக்சி டிரைவர்களும் கூறினர். இதனால் திருப்தி தேசாய் விமான நிலையத்திற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தன்னுடன் வந்த பெண்களுடன் திருப்திதேசாய் காலை சிற்றுண்டி உட்கொண்டார். #TruptiDesai #Sabarimala
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப்படியே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான், மராட்டிய மாநிலத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன்.
என்ன எதிர்ப்புகள் வந்தாலும் ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அவர்கள் எனக்கும், என்னுடன் வந்த பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்திதேசாய் பேட்டி பற்றி அறிந்த பக்தர்கள், திருப்திதேசாய் ஐயப்பனை தரிசிக்க வரவில்லை. ஐயப்ப பக்தர்களின் அமைதியை குலைக்க வந்துள்ளார். மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வந்துள்ளார்.
அவரை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம். இங்கிருந்து அவர், திரும்பிச் செல்லும் வரை நாமஜெப போராட்டம் நடத்துவோம் என்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு திருப்தி தேசாயை அழைத்து செல்ல மாட்டோம் என்று விமான நிலைய டாக்சி டிரைவர்களும் கூறினர். இதனால் திருப்தி தேசாய் விமான நிலையத்திற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தன்னுடன் வந்த பெண்களுடன் திருப்திதேசாய் காலை சிற்றுண்டி உட்கொண்டார். #TruptiDesai #Sabarimala
சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து இளம்பெண்கள் விரதத்தை தொடங்கினர். #Sabarimala
கொழிஞ்சாம்பாறை:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனை பலர் வரவேற்றுள்ளனர்.
ஆனால் கேரள மாநிலத்தில் பெண்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் ஐயப்பன் கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க மாட்டோம். கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
எங்களுக்கு ஐயப்பன் மீது பக்தி அதிகம். கடந்த சில வருடங்களாக 41 நாட்கள் விரதம் இருந்து வீட்டிலேயே ஐயப்பனை வணங்கி பூஜை செய்து முடித்தோம். அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனநிறைவை அளிக்கிறது. ஐயப்பனை நேரில் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஆண்களை போலவே கடும் விரதம் இருந்து காடுமலை கடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினர். #Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனை பலர் வரவேற்றுள்ளனர்.
ஆனால் கேரள மாநிலத்தில் பெண்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் ஐயப்பன் கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க மாட்டோம். கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கன்னுபுரம் அய்யத்தோள் என்ற பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 29), நிசாந்த் (27) பெயர் கூற விரும்பாத மற்றொரு பெண் உள்பட 3 பெண்கள் நேற்று மண்டல விரதத்தை தொடங்கினர். கருப்பு ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல உள்ள பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு ஐயப்பன் மீது பக்தி அதிகம். கடந்த சில வருடங்களாக 41 நாட்கள் விரதம் இருந்து வீட்டிலேயே ஐயப்பனை வணங்கி பூஜை செய்து முடித்தோம். அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனநிறைவை அளிக்கிறது. ஐயப்பனை நேரில் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஆண்களை போலவே கடும் விரதம் இருந்து காடுமலை கடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினர். #Sabarimala
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X